Sunday, 1 December 2013

வெள்ளரிக்காய் மாஸ்க்

வெள்ளரி எல்லா சருமத்தினருக்கும் மிகவும்  நல்லதாகும்.வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். இது பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது. வெள்ளரிக்காய் மாஸ்க் உபயோகிக்கும் முறை:-

முடியை கெட்டியாக முடிந்து கொள்ளவும். தூய்மையான நீரைக் கொண்டு நன்றாக முகத்தைக் கழுவிக் கொள்ளவும். வெள்ளரிக்காய், தேன்,மற்றும் புதினா சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைப்பழசாறு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.

அகன்ற பாத்திரம் மற்றும் மிருதுவான பிரஷ்ஷை உபயோகித்து முகத்திற்கு “மாஸ்கை பூசவும்.  முகத்தின் மென்மையான பாகங்களான கண்களின் ஓரம், இமைகள் மற்றும் உதடுகள் ஆகியவற்றில் மாஸ்கை தடவுவதை தவிர்க்கவும்.

ஆனால் கண்ணின் மீது வெள்ளரியை வட்டமாக வெட்டி வைக்கவும். மாஸ்க் தடவிய பிறகு குறைந்தது அரை மணி நேரம் காய வைக்கவும். பின்பு மாஸ்கை அகற்றும் போது கவனத்துடன் அகற்றவும். மீண்டும் தூய்மையான நீரால் நன்றாக முகத்தைத் துடைத்துக் கழுவவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.









*

No comments:

Post a Comment