Sunday, 1 December 2013

அழகான கூந்தலுக்கு...

நீண்ட, அழகான கூந்தலைப் பெற எல்லா பெண்களுக்குமே ஆசைதான். கழித்து அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால் முடிகொட்டுவது நின்றுவிடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளைக் கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து கலக்கி, தலையில் தேய்த்துக் குளித்துவர தலைமுடி உதிர்வது நிற்கும்.

இளநரை மீண்டும் கறுப்பாக மாறுவதற்கு, அடிக்கடி உணவில் நெல்லிக்காயைச் சேர்த்து வருவது நலம். வெந்தயம், குன்றிமணியைப் பொடி செய்து, தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்திப் பூவை இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி ஊறவைத்துத் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக மாறும். தலைமுடி கருமை, மினுமினுப்புப் பெற அதிமதுரம் 20 கிராம் எடுத்து 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவைத்து, 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற, மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்குத் தடவினால் பலன் இருக்கும். வேப்பிலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீரில் வேகவைத்து, ஒருநாள் முளைக்கீரை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும்.

முடி நன்கு வளர்வதற்கு கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கலாம்.

No comments:

Post a Comment